செவ்வாய், 31 மே, 2016

திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்

கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு... திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்அமராவதி: கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறான நேற்று திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வரும் ஜுன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோடை விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை 
அதிகரித்துள்ளது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 29 மே, 2016

முறுகண்டி பிள்ளை யார் ஆலயத்துக்கு முன்பாக விபத்து!!!…

கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் இன்று (29.05.2016) முருகண்டி ஆலயத்துக்கு முன்பாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியிலிருந்து முறுகண்டி நோக்கி பயணித்த டிப்பர் ஒன்றுடன் TATA கப் இடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது....இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் ..நிழல் படங்கள் இணைப்பு ....
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

வெள்ளி, 27 மே, 2016

இந்து ஆலயங்கள் மீள் புனருத்தாரண சபை அங்குரார்ப்பணம்

வலிகாமம் வடக்கு இந்து ஆலயங்கள் மீள் புனருத்தாரண சபைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27-05-2016) பிற்பகல் -2 மணி முதல் தெல்லிப்பழை லயன்ஸ் கழக மண்டபத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலர் பா. ஜெயகரன் தலைமையில் 
இடம்பெற்றது.
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில், அகில இலங்கை சைவமகாசபையின் அனுசரணையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் மாவை சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளரும், வலி.வடக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளருமான சி.நாகேஸ்வரன் தலைவராகவும், வலிகாமம் கல்வி 
வலய ஆசிரிய 
ஆலோசகர் தா. நிகேதன் செயலாளராகவும், வவுனியா பல்கலைக் கழக வளாகப் போதானாசிரியர் சி.சந்தான கிருஷ்ணன்பொருளாளராகவும், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி -அ.ஞானேஸ்வரி
 உபதலைவராகவும்,
 எஸ்.ரஞ்சிதன் உப செயலாளராகவும், ச.லக் ஷிகா பத்திராதிபராகவும், ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். வைத்திய கலாநிதி பி.நந்தகுமார், கீரிமலை ரேணுகா ஆச்சிரம பீடாதிபதி சிவஸ்ரீ உருத்திர புரீஸ்வரக் குருக்கள், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருப்பணிச் சபைச் செயலாளர் ஆர். பேரின்பநாயகம், அகில இலங்கை சைவ மகா 
சபையின்
 செயலாளர் வைத்தியகலாநிதி ப. நந்தகுமார், தெல்லிப்பழை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் போஷகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டத்தரணிகளான ஜெ.ஜெயரூபன், கு.புரந்திரன் 
ஆகியோர் சட்ட 
ஆலோசகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் வலிகாமம் வடக்கில் மீள் குடியமர்த்தப்பட்ட மற்றும் மீள்குடியமர்த்தப்படவுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் 17 உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது.
உறுப்பினர்கள் தெரிவைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது வலிகாமம் வடக்கில் கடந்த கால போர்ச் சூழல் காரணமாகச் சேதமடைந்த அனைத்து ஆலயங்களினதும் சேதவிபரங்கள் தொடர்பில் தகவல் திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதெனவும், ஆலயங்களைப் பதிவு செய்தல் தொடர்பிலும் கவனம்
 செலுத்தப்பட்டது.
இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் வலி.வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை சைவ மகா சபையின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும்
 கலந்து கொண்டனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




வியட்நாம் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

ஜப்பானில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வியட்நாம் பிரதமர் நுயென் ஜுவான் புக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இருதரப்பு பேச்சு நடத்தப்பட்டது. ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் வந்த இலங்கை
 ஜனாதிபதி, 
ஜப்பான் நகோயா டோக்கியோ ஹோட்டலில் வியட்நாம் பிரதமருடன் முக்கிய பேச்சு நடத்தினார். அரிசி மற்றும் ஏனைய பயிர்களுடன் தொடர்புடைய தொழிநுட்பம் மற்றும் விவசாயத்துறையில் 
நெருங்கிய கூட்டுறவை 
ஏற்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வியட்நாம் பிரதமர் நுயென் ஜுவான் புக்கும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். வியட்நாவின் தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
 இதன்போது 
அழைப்பு விடுத்தார். விவசாயம், தொழிநுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தமது நாடு விரும்புவதாக வியட்நாம் பிரதமர் தெரிவித்தார். அத்துடன் தமது வருடாந்த வர்த்தக பெறுமதி 200 மில்லியன் 
டொலர்கள் வரை 
அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், இதனை மேலும் அதரிகரிப்பதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். தாம் பிரதிப் பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே மேற்கொண்டிருந்த சந்திப்பு குறித்து நினைவுகூர்ந்த வியட்நாம் பிரதமர்,
 பிராந்திய மற்றும்
 சர்வதேச மன்றங்களில் வியட்நாமுடன் நெருங்கிய கூட்டுறவைப் பேணுவது தொடர்பில் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார். கடல் மார்க்க பாதுகாப்புக்கான இலங்கையின் பங்களிப்புகளை வலியுறுத்திய அவர், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கடல் சட்டங்களின் கீழ் கடல் மார்க்கங்களின் 
பாதுகாப்பை மேலும்
 உறுதி செய்யும் வகையில் இரண்டு நாடுகளும் நெருங்கிப்பணியாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். விவசாய அமைச்சர் என்றவகையில் தாம் வியட்நாமுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை நினைவுகூர்ந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாய,
 தொழிநுட்பத்தில் 
வியட்நாம் அடைந்திருக்கும் பாரிய அபிவிருத்திகளைப் பாராட்டியதோடு, இந்த தொழிநுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்வதில் இலங்கை பயனடைய முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு 
ஜனாதிபதி மைத்திரிபால
 சிறிசேன விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட வியட்நாம் பிரதமர், மிக விரைவில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும்
 கூறினார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொ
ம் செய்திகள் >>>


வியாழன், 26 மே, 2016

எழுபத்தி எட்டாவது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவம்.!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 78 ஆவது பட்டமளிப்பு வைபவம் இன்று உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதன்போது, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா தலைமையில் பட்டதாரிகளது ஊர்வலம் இடம்பெற்றது


இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

தக்குதலில் பொலிஸ் அதிகாரியின் மகள் பலி ; மனைவி காயம்

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவரின் மருமகன் மேற்கொண்ட தாக்குதலில் அவரின் மகள் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 20 வயதுடைய மகளே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



புதன், 25 மே, 2016

மாணவர்கள் மீது காண்டுமிரண்டி தாக்குதல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் படத்தை பதிவேற்றிய பல்கலைக்கழக தமிழ் மாணவன் மீது
சிங்கள காண்டுமிரண்டி மாணவர்கள் தாக்குதல் .
தனது முகநூலில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றை தரவேற்றிய கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மீது சில சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ இரண்டாம் வருட மாணவனான லுமேஸ்காந் (22 வயது) என்ற மாணவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு வருகைதந்த சில மாணவர்கள்,
முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அடையாளப்படுத்திய புகைப்படம் ஒன்றைக் காட்டி இது உன்னுடைய முகநூலா என்று என்னை சூழ்ந்து கொண்ட சில சிங்கள மாணவர்கள் கேட்டபோது,
ஆம் இது என்னுடைய முகநூல்தான் என கூறினேன்.
அப்போது, அதில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படத்தை உடனடியாக அழிக்க வேண்டும் எனக் கூறி என்னைத்
 தாக்கினார்கள்.
என்னிடம் இப்போது அதனை அழிக்ககூடிய வசதி இல்லை என நான் கூறியபோது, அதனை நீ அழிக்காவிட்டால் உன்னை பரீட்சை எழுதவிடமாட்டேன் என்று கூறி என்னை தாக்கினார்கள். என தாக்கப்பட்ட மாணவர் ஊடகங்களுக்கு கருத்து 
தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.    இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2016

பஸ்களில் போக்குவரத்துக்கு கட்டணம் இல்லை !!!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை
 கூறியுள்ளது. 
போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை 
கூறியுள்ளது. 
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோள்படி உரிய டிப்போக்களின் ஊடாக போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்தன கூறினார். 
இதற்கிடையில் உடரட்ட மார்க்கத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி வரை புகையிரத சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறுவதாக லங்கை போக்குவரத்து சபை 
தெரிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 21 மே, 2016

இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மாங்குளத்தில் மீள்ப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய நாகலிங்கம் யோகேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
குறிப்பிட்டனர்.
இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று இதுவரை அறியப்படாத நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 18 மே, 2016

வெள்ளநீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!!!


வத்தளை – அவரகொட்டுவ பிரதேசத்தில் வெள்ளநீரில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வெள்ளநீர் காணப்பட்ட வேளை ரெஜிபோம் பெட்டி ஒன்றில் ஏறி சிறுவர்கள் விளையாட முயன்ற போதே நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்களின் சடலம் தற்சமயம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


திங்கள், 16 மே, 2016

இந்து சமயப் பேரவையின் விருது வழங்கல் நிகழ்வு ?

யாழ் பலாலி வீதி .இலக்கம்..141.இந்து சமயப் பேரவையின்  திருமுறை மகாநாடு 
இந்து சமயப் பேரவையால் கிருபா லேணர்ஸ்க்கு , , முன்னணி பயிற்றுவிப்பாளர்கள், , என்ற விருதும், அதிபருக்கு ,,, , சமூகமாமணி,என்ற விருதும் வழங்கிக் கௌரவிக்கபட்டநிகழ்வின் 
நிழல் படங்கள் இணைப்பு ....
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>

ஞாயிறு, 15 மே, 2016

உலக சாதனை படைத்த காணொளி பார்க்க தவறாதீர்கள் !!!

இன்று உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய  5 நிமிட அபூர்வ காணொளி  உலக சாதனை படைத்த காணொளி 
யைய்ப் பார்க்க தவறாதீர்கள் !!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இலங்கை கடற்படை கச்சதீவில் இருந்து ஓட்டம் எடுத்தனர்!

இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காணப்படும் வரையில், புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன
 தெரிவித்துள்ளார்.
யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் வேண்டுகோளின் பேரிலேயே சிறிலங்கா கடற்படை இந்தக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேவாலய கட்டுமானப் பணிகளுக்கு கடந்த திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேவேளை, 1974ஆம் ஆண்டு உடன்பாட்டுக்கு அமைய சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவில் சிறிலங்கா கடற்படை கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதாகவும், இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புமாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்திருந்தார்.
எனினும், கச்சதீவில் கடற்படை முகாமை அமைக்கவில்லை என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 13 மே, 2016

ஆணுடன் கைகுலுக்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்.!

ஈரான் பெண் எம்பி மினோ கலேகி தலையை மறைக்கும் கெட்ஸ்கார்ப் இல்லாத இவரது புகைப்படங்கள் இணைய தளங்களில்
 வெளியானது.
மேலும், ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு சென்ற போது, அவர் வெளிநபர்களுடன் கைகுலுக்கிய போட்டோகளும் 
வெளியானது.
இந்த நிலையில், தலையை மறைக்க துணி அணியவில்லை என்றும், முகம் தெரியாத வெளிநபர்களுடன் கைகுலுக்கியதற்காகவும் இஸ்லாமிய சட்டபடி பெண் எம்பி மினோ கலேகி மீது விசாரணை
 நடைபெற்றது.
இதில், அவர் அந்தப்புகைப்படங்கள் போலி என வாதிட்டார். இதனை ஏற்காத தீப்பாயம், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, மினோ கலேகியின் எம்பி பதவி
 பறிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.