திங்கள், 21 நவம்பர், 2016

டுபாயில் புலம்பெயர்து தொழில் பணிபுரிவோருக்கு அவசர அறிவித்தல்!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளுமாறு கடந்த ஜூன் மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது,குறித்த காலம் நிறைவடைந்த நிலையிலும் டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் 12 வீதமானவர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதிகளை பெற்றுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே,மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்புறுதியை அவர்கள் தொழில் புரியும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களே பெற்றுக் கொடுக்க வேண்டும்.மேலும்,இதற்கான பணத்தை புலம்பெயர் தொழிலாளிகளிடம் அறவிடுவது சட்டவிரோதமான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சாரதிகளுக்கு அவர்களுடைய முதலாளிகளே மருத்துவ காப்புறுதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அபுதாபியில் மருத்தவ காப்புறுதி முன்னதாகவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மருத்துவக் காப்புறுதி இருந்தால் மட்டுமே குடும்பங்களை வரவழைப்பதற்கான வீசா அனுமதி வழங்கப்படும் என்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 18 நவம்பர், 2016

இடது விரலுக்கு திருமண மோதிரம் அணிவதற்கான காரணம் என்ன !

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர்.
இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயங்களும் தான்.
ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால், இரத்தஓட்ட அமைப்பு(Circulatory System) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து Tudor times ஆராய்ச்சி நடத்தியது.
இதில், இரது விரலுக்கும், இதயத்திற்கும் ஒருவித தொடர்புள்ளது, அதாவது, இடது கையில் நான்காவது விரலில் உள்ள நரம்பு நேரடியாக இதயத்துடன் இணைகிறது.
இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது, இதனை “காதல் நரம்பு” என்று மக்கள் அழைக்கின்றனர், அதாவது இந்த மோதிரத்தின் மூலம் பரிமாறப்படும் அன்பு நேரடியாக இதயத்திற்கு சென்று சேர்கிறது என்று மக்கள் நம்பி வருகின்றனர்.
ஆனால், திருமண மோதிரத்தை இடது கையில் தான் அணிய வேண்டும் என்று எவ்வித சட்டமும் இல்லை, உங்களுக்கு எந்த விரலில் மோதிரம் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறீர்களோ, அந்த விரலில் அணியுங்கள்.
ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்றன, பொதுவாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில், திருமண ஜோடிகள், வலது கையில் மோதிரம் அணிகின்றனர்.
ஆஸ்திரியா, டென்மார்க், போலந்து, ஜேர்மன் போன்ற நாடுகள் இந்த வலது கை கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர்.
ஜேர்மனிய ஜோடிகள், திருமணத்திற்கு முன்னர் இடது கையிலும், திருமணம் முடிந்த பின்னர் வலதுகையிலும் மோதிரத்தை மாற்றிக்கொள்கின்றனர்.
இவ்வாறு மோதிரத்தை திருமணத்திற்கு பின்னர் வேறு விரலில் மாற்றிக்கொள்வது, ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது.
ஆரோக்கிய பிரச்சனைகள்
நீண்ட காலமாக மோதிரத்தை அணிந்திருந்தால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
முடக்குவாதம், விரல்களின் வீக்கம் ஏற்படுமேயானால், நீங்கள் கண்டிப்பாக இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 17 நவம்பர், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி நினைவுமண்டவிழா

யாழ் கோப்பாய் கிறிஸ்தவ  பாடசாலையின் நினைவுமண்டபத்தில் உள்ள மேடை புனரமைக்கப்பட்டு 16.11.2016 நடைபெற்ற ஒளிவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட
 நிழல் படங்கள்இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 11 நவம்பர், 2016

சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம்

யாழ் இணுவில் பகுதியில் சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் சிதறி ஓடுவதாகத் தெரியவருகின்றது.
குறித்த ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமான இளைஞன் ஒருவனை ரயிலில் ஏறித்து துரத்திய ரவுடிகள் அவனைப் பிடித்து ரயிலில் இருந்து தள்ளிக் கீழே விழுத்தியதாகவும் இதனால் ரயிலை இணுவில் பகுதியில்
 மக்கள் மறித்து 
யாழ் இணுவில் பகுதியில் சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் சிதறி ஓடுவதாகத் தெரியவருகின்றது. குறித்த ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமான 
இளைஞன் ஒருவனை ரயிலில் ஏறித்து துரத்திய
 ரவுடிகள் அவனைப் பிடித்து ரயிலில் இருந்து தள்ளிக் கீழே விழுத்தியதாகவும் இதனால் ரயிலை இணுவில் பகுதியில் மக்கள் மறித்து வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாரும் இனி கவலைப்பட வேண்டாம்-அரசு அதிரடி அறிவிப்பு!!

இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
இரவில் தாமதமாகி வேலையை முடித்துவிட்டு செல்பவர்களுக்கும், உறவுகளை விட்டு பிரிந்து வந்து வேலை செய்பவர்களுக்கும் இந்த நடவடிக்கை சாதகமான ஒன்றாக 
கருதப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.