திங்கள், 26 டிசம்பர், 2016

பிரதான வீதியான ஏ9 வீதியில் பயணிக்கும் அனைத்து மக்களின் கவனத்திற்கு:!

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும்.
இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில்
 உயிரிழந்தார்.
ஏ-9 நெடுஞ்சாலையில் அதிகளவிலான விபத்துக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் இந்த தரவுகளின் மூலம் 
தெரியவந்துள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 18 டிசம்பர், 2016

யாழில் இடம்பெற்ற பஸ் .வேன் விபத்தில் 10 பேர் பலியானர்கள் !

 சாவக்கச்சேரி பகுதியில்.17.12.2016. இடம்பெற்ற வாகனவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வவுனியாவிற்கு இடையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் உடன் வேன் ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 விபத்தின் நிழல் படங்கள் இணைப்பு ...  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

”நாடா” சூறாவளி: இந்தியாவை நோக்கி நகரும் பலத்த மழை பெய்யக்கூடும் !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் உருவான ”நாடா” சூறாவளி இன்று இரவு யாழ். குடாநாட்டை அண்மித்து இந்தியாவை நோக்கி நகரவுள்ளதால் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியின் தாக்கத்தினால் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளி வலுப்பெற்று, வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது
இதன் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தின் திருநெல்வேலி, நாகப்பட்டிணம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் துறைமுகம், பாம்பன் துறைமுகம், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் இரண்டாம் எண் சூறாவளி எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலுள்ள எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
நாடா புயல் காரணமாக சென்னை, நாகை, காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் (01) நாளை மறுதினமும் (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுக்காவிலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
இன்றிரவு சூறாவளி சென்னையை அண்மித்து, ஆந்திராவின் ஊடாக நகரும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அநேகமான மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லவில்லை என இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர்கள் 
கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 3 டிசம்பர், 2016

தீர்த்தக்கரை புகழருவி ஒளி விழா நிகழ்வு

 தீர்த்தக்கரை புகழருவியில் உள்ள சிறுவர் பாடசாலையில் ஒளி விழா நிகழ்வுகள்.2/12/2016. சிறப்பாக நடந்தேறியது
அங்கே நடந்த ஒளிவிழாவில் கலைஞர் கு.யோகேஸ்வரன் அழைக்கப்பட்டு அவர்கையால்
சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பரிசில்
 வழங்க்கப்பட்டது ,
இந்த கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு கலைஞர் கு.யோகேஸ்வரன் மக மகழ்வாக கருதிவா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நின்றார்
.நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.