செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர்யாழில் வாள்களுடன் நடமாடிர்


யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர் வாள்களுடன் நடமாடியுள்ளனர் என
 தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சினிமா பாணியில் கைகளில் இருந்த வாளை வீதியை தொடுமாறு வைத்துக்கொண்டு, வீதியை உரசியபடி நடமாடித்திரிந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 7.30 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு 
நடமாடியுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ் பழைய பொலிஸ் நிலையம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், பிரதி பொலிஸ்மா அலுவலகம் என்பனவற்றுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே நடைபெற்றுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை நேற்று பிற்பகல் யாழ். கோப்பாய் சந்தியில் உள்ள கள்ளுத்தவறனை முன்பாக 5 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்ததோடு 3 வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
இவ்வாறு யாழில் நேற்று வாள்வெட்டுக்குழு துணிகரமான முறையில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அண்மையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 20 பிப்ரவரி, 2017

கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில்வடக்கின் பல பகுதிகளில், வீதிகளில்

வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு பகலாக போராடி வருகின்றனர்.
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெ
டுக்கப்படுகின்றது.
எனினும், இதுவரை எவ்வித தீர்வையும் வழங்காமையானது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 22 நாட்களை எட்டியுள்ளது.
அத்தோடு, புதுக்குடியிருப்பு மக்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் இரவு பகலாக இன்றும் 
தொடர்கின்றது.
மறுபுறத்தில், காணாமல் போன தமது உறவுகள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் நேற்று முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டத்திற்கு இன, மத, மொழி பேதமின்றி பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றபோதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் முன்வைக்காமையானது இம்மக்களை விரக்தியடைய வைத்துள்ளது.
வடக்கில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுடன் இரவு வேளைகளில் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் இம் மக்கள், தமது நிலையை கருத்திற்கொண்டு தமது நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை
 விடுக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 15 பிப்ரவரி, 2017

மினரல் வாட்டர், வீட்டு உணவு வேண்டும் என சிறையில சசிகலா கோரிக்கை!

  சசிகலா,  சிறையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, வேண்டும் என சசிகலா கோரிக்கை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள்
 உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதர்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து சசிகலா இன்று காலை 11. 40 மணிக்கு சசிகலா  போயஸ் கார்டனில் இருந்து மெரினா கடற்கரை சென்றார். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை 
செலுத்தினார்.  அப்போது ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணு முணுத்தவாறு சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
பின்னர் சசிகலா ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜிஆர். வீட்டிற்கு சென்றார். அங்கு ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் படம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து  கார் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தண்டனை பெற்ற இளவரசியும் சென்றார். 
இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைவார். இந்த நிலையில், அவர் தரப்பில் சிறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து கோரிக்கைக் கடிதம்
 வைக்கப்பட்டது.
அதில், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை தனது அறையில் கிடைக்க வசதி செய்யுமாறு
 கேட்கப்பட்டுள்ளது.
சசிகலா அடைக்கப்பட உள்ள அறையில் கட்டிலும் டிவியும் இருக்கும். அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.