செவ்வாய், 24 ஜூலை, 2018

திடீரென யாழில் மயங்கி வீழ்ந்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

துவிச் சக்கர வண்டியில் பயனித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கோப்பாய் இருபாலை கிழக்கை சேர்ந்த சபாபதி அருளானந்தம் என்ற 68 வயதுடைய வயோதிபர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வயோதிபர் கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது பேரப்பிள்ளையை ஏறுவதற்காக சென்றுள்ளார். 
அங்கு சென்று பேரப்பிள்ளையை ஏற்றிக்கொண்டு வீடு செல்லும் போது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படடர்.எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளார் என அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவரது
 உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட்து.
இந்த இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மின்சாரம் தாக்கி கோப்பாய் பகுதியில் உயிரிழந்த பெண்

வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் நேற்று 21  சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தவராசா செபராணி என்பவரே உயிரிழந்தவராவர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 
தெரியவருவதாவது ,
வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைப்புக்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டருக்கு மின்சாரம் வழங்கப்பட்ட மின் வயர் சேதமடைந்திருந்த நிலையில், அந்த வயரை பிடித்தமையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என மரண விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 23 ஜூலை, 2018

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த யுவதி தீயிட்டு தற்கொலை

கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
‘உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும். அவர் சற்று அடம்பிடிக்கும் குணமுடையவர். பல முறை வீட்டில் சண்டடையிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸாரின் உதவியுடனே அவரை கண்டுபிடித்தோம்.
பொலிஸ் அதிகாரிகளே அவருக்கு ஆலோசனை வழங்கி எங்களிடம் அனுப்பி வைத்தார்கள். இறுதியாக மகள் ஐபோன் ஒன்று கேட்டார். அவரது நிலை அறிந்தமையினால் ஐபோன் ஒன்றை கொள்வனவு செய்து கொடுக்க தீர்மானித்தோம். இன்னும் இரண்டு நாட்களில் பெற்றுத் தருவாக கூறிவிட்டு அதற்கு தேவையான பணத்தை தேடி கொண்டிருந்தோம். எனினும், அவர் அதற்கு முன்னர் கோபத்தில் உடலில் மண்ணெண்ய் ஊற்றி கொண்டு தாயின் முன்னால் சென்று தீயிட்டு கொண்டார்.
தான் ஐபோன் கிடைக்காதென நினைத்து தாயை அச்சுறுத்துவதாக இந்த வேலை செய்தாக கூறினார். அவரை காப்பாற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து சென்றோம். அந்த வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவரை மாற்றி அனுப்பினார்கள். எனினும், மகளை காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது தந்தை கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வியாழன், 19 ஜூலை, 2018

பத்தமேனியில் பத்திரகாளிஅம்மனுக்கு நடந்த கதி

யாழ் அச்சுவேலி - பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில்  செவ்வாய்க்கிழமை (17-.07.2018 ) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச் செய்யவிடாமல்
 வேறு ஒருவரைத் தான் ஏற்பாடு செய்வார் என ஆலய தர்மகத்தா கூறினார் எனவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்தே கொடியேற்ற விடாமல் தர்மகத்தா தடுத்துள்ளார் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இவ்வருடம் புதிய சித்திரத் தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நாளை 
வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால், கொடியேற்றம் இடம்பெறாமையால் தேர் வெள்ளோட்டம் எப்படி நடைபெறும் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆலய அர்ச்சகர் உட்பட பிரதேச மக்கள் பலரும் தர்மகத்தாவிற்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் இம்மியும் இளகவில்லை எனத் தெரியவருகின்றது.
இதனால், நேற்றைய கொடியேற்றத்திற்காக நேற்று முன்தினம் வைக்கப்பட்ட கும்பங்கள் அனைத்தும் நேற்றுக் காலை கலைக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் நித்திய பூசை மட்டும் இடம்பெற்றது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அண்மையில் வரணியில் ஜே.சி.பி வாகனத்தால் தேர் இழுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், நேற்று ஒரு ஆலயத்தில் கொடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Blogger இயக்குவது.