புதன், 17 மே, 2023

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் செயலை பலரும் பாராட்டு.16.05.23

யாழ் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சிறுவர்கள், கர்ப்பவதிகளுக்கு 63,000 ரூபா சத்துமா பொருட்கள் வழங்கப்பட்டது
தொண்டைமானாறு தெற்கு, கெருடாவில் தெற்கு 
பிரதேசங்களில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்கள், கர்ப்பவதிகள் அடங்களாக 3000 ரூபா 
பெறுமதியான சத்துணவுப் பொருட்கள் ( பயறு, உழுந்து, 
கௌப்பி, சோளம், கடலை, அரிசி, சீனி) 21 பேருக்கு 1ம் கட்டமாக வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக மாதாந்தம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் உதவித் திட்டம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.