திங்கள், 3 அக்டோபர், 2022

புராதன சின்னமான யாழ் கோட்டைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை தகவல்

யாழ்ப்பாணத்தின் புராதன சின்னமாக காணப்படும் யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்
 தெரிவித்துள்ளார்.
கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு மட்டங்களில் இதன் பிரதிபலிப்பு உணரப்பட்ட நிலையில் பொலிஸாருடனும், இது தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் தொடர்புகளை மேற்கொண்டு
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.நீதிபதிகளும் இது தொடர்பாக யாழ்.மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.யாழ்.கோட்டைப் பகுதியினை சுற்றி இருக்கின்ற பற்றைக்காடுகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இதனடிப்படையில் நான்.03-10-2022. இன்றைய தினம் நேரடியாக கோட்டை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானித்தேன்.இதன்போது எங்கள் கண் முன்னே சமூதாய சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனையும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
எனவே எதிர்காலத்தில் இந்த பகுதி திடீர் திடீரென
 பொலிஸ் உடனான எங்கள் சுற்று வளைப்புக்கள், கண்காணிப்பு பணிகளுக்குள் உள்ளாக்கப்படும் என்பதை பொது மக்களின் கவனத்திற்கு எச்சரிக்கை தகவல் மீறினால் சட்ட நடவடிக்கைஎடுக்கபப்டும்கொண்டு வருகின்றோம்.”என கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைவோருக்கு புலமைப்பரிசில்

 இலங்கையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க 
பணிப்புரை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 21 செப்டம்பர், 2022

நாட்டில் விளையாட்டுக்கு அடிமையாகி தாயின் வங்கி கணக்கில் மகன் மோசடி

இலங்கையில் ரக்வான பிரதேசத்தில் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து  இரண்டு லட்சத்து 8 ஆயிரம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக செய்தி 
வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதால் இணையம் மூலம் கல்வி கற்க பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையடக்க தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளனர்.
மாணவரின் தாயார் அரச அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும் தந்தை வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவன், ஒன்லைன் மூலம் கல்வி கற்காமல், ஒன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளார்.
தாயின் பெயரில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தகவல்களுக்கு மகனின் தொலைபேசி இலக்கத்தை வங்கிக்கு 
வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அவரது வங்கிக் கணக்கின் தரவுகள் அனைத்தும் மகனின் தொலைபேசியில் கிடைத்துள்ளதுடன், இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாணவன் சில காலமாக ஒன்லைன் விளையாட்டுகளை விளையாடியுள்ளார்
இது தொடர்பில் எதுவுமே தெரியாத தாய், நேற்று முன்தினம் வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ​​தனது கணக்கில் இரண்டு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் குறைவாக இருந்ததை அறிந்த தாய், வங்கியில் முறைப்பாடு 
செய்துள்ளார்.
கணக்கை கண்காணித்த அதிகாரிகள் தாயின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி ஒன்லைன் விளையாட்டுகளுக்கு மகன் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 24 ஆகஸ்ட், 2022

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட அறிவிப்பு

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி 
இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில்,தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும்
 வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
டந்த வருடம் கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது.
எனினும் இம்முறை வழமை போன்று 
பெருந்திரளான
 அடியவர்கள் பங்கேற்பர். வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர். அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும்.
அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு 
அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இயன்றளவு நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தினை எடுத்து வருவதைத் 
தவிர்க்க வேண்டும்.
மேலும்,பெருமளவு பொலிஸார் உற்சவ காலக்கடமையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 3 ஜூலை, 2022

வீசா இன்றி பாஸ்போர்ட் மட்டும் போதும் செல்லக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுசீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தினால் இந்த தரப்படுத்தல் 
வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்ற பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகிறது. விசா பெறாமல் வேறு நாட்டிற்கு பயணிக்கும் கடவுச்சீட்டின் திறனைப் பொறுத்து இந்த 
தரவரிசை மாறுபடும்.
அதற்கமைய, இந்த பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. அந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் விசா இல்லாமல் 115 நாடுகளுக்குள் நுழைய முடியும். நுழையும் போது விசா பெறக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை (Visa On Arrival) 55 ஆகும். 28 நாடுகளுக்கு 
மட்டுமே முன் விசா தேவையாக உள்ளதென 
குறிப்பிடப்படுகின்றது.
இந்த தரவரிசையில் இலங்கைக்கு 83வது இடம் கிடைத்துள்ளது. 12 நாடுகளுக்கு விசா இன்றி இலங்கை கடவுச்சீட்டுடன் நுழைய முடியும். Visa On Arrival விசாவின் மூலம் 37 நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 
உலகெங்கிலும் உள்ள 147 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே விசாவைப் பெற வேண்டும். பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 
சுட்டெண் தரவுக்கு அமைய, இலங்கை கடவுச்சீட்டுடன் 
வீசா பெறாமல் Bahamas, Barbados, Dominica, Gambia, Grenada, Haiti, Lesotho, Saint Kitts, Nevis, Singapore, St. Vincent, the Grenadines, Tajikistan மற்றும் Venezuela ஆகிய நாடுகளுக்கு நுழைய முடியும்.
இதேவேளை, The Henley Passport Index Q2 2022 உலகளாவிய தரவரிசையின் படி, இலங்கை 103வது இடம் கிடைத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 26 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

இலங்கையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை 
அன்றாட சேவைக்கு
அழைக்குமாறு அரச நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் ஒன்று.26-06-2022. இன்றைய திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி,
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு 
அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயன்ற வரையில் பணியாளர்களை வீட்டில் 
இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் குறித்த 
சுற்றுநிருபம் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 8 ஜூன், 2022

குறைந்த பட்சம் வீசா இன்றி 190 நாடுகளுக்கு இலங்கையர் பயணிக்கும் வாய்ப்பு

வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிற்கான எதிர்காலம் என்ற சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது, இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம்
 கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாட்டிற்கான எதிர்காலம் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டாளர் சரத் களுகமகே தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு மீதான சர்வதேச தரநிலைகளின் படி, இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.
ஆசிய நாடான, ஜப்பானியர்கள் விசா இன்றி 190 நாடுகளுக்கு பயணம் செய்யலாம், ஆனால், எமது நாட்டவரால் விசா இல்லாமல் செல்ல முடியுமா” என நாட்டிற்கான எதிர்காலம் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு இந்த நாட்டின் அரசியல் தரப்பினரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதை தாம் கடுமையாக வலியுறுத்துவதாக சரத் களுகமகே குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சி அமைத்த எந்த அரசும் இதில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்களிடம் அதிகாரம் இருப்பதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் கோரிக்கைக்கு ஏறக்குறைய அனைத்து நாடுகளும் உரிய கவனம் செலுத்துகின்றன எனவும் நாட்டிற்கான எதிர்காலம் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டாளர் கூறியுள்ளார்.
அனைத்து தூதுவர்களையும் சந்திப்புக்கென நாடாளுமன்றத்திற்கு சபாநாயகரால் அழைக்க முடியும் எனவும் அனைத்து இலங்கையர்களுக்கும் விசா இன்றி பயணம் செய்வதற்கும் தொழில் செய்வதற்கும் வாய்ப்பளிக்குமாறு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் பகிரங்கக் கோரிக்கை விடுக்க முடியும் எனவும் சரத் களுகமகே 
குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குடிசார் செயற்பாட்டாளர் என்ற வகையில், நாட்டு மக்களுக்காக அதனைச் செய்வதில் கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சரத் களுகமகே, சபாநாயகரிடம் வேண்டுகோள் 
.விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 17 மே, 2022

நாட்டில் 2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் .2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் (2022) தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதை தடை செய்து விதிக்கப்பட்ட காலக்கெடு மே 20ஆம் திகதி வரை 
நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு நேற்று நள்ளிரவு முதல் (17) பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்ட க.பொ.த. சாதாரண தர பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவது, மே 20 நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் செய்யப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
குறித்த நிலைமை தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள், பரீட்சார்த்திகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, பரீட்சார்த்திகளுக்கு குறிப்பிட்ட வகையில் நியாயத்தை நிலைநாட்டும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் மே 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (2022) தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தடைவிதிக்கப்படும் குறித்த காலப்பகுதியில், 
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துதல்,
 ஒழுங்குபடுத்தல். பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல். குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல் குறித்த பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குவதாகவோ, 
அது போன்ற மாதிரி வினாக்களை வழங்குவதாகவோ 
சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன 
குற்றங்களாகும். –
குறித்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவர். – எவரேனுமொருவர் அல்லது நிறுவனம், குறித்த உத்தரவுகளை ஏதேனுமொரு வகையில் மீறுதல் 
அல்லது செயற்படும் நிலையில், அது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, காவல் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் 
விடுத்துள்ளார் –
காவல்துறை தலைமையகம் – 011 2421111 – காவல்துறை அவசர தொலைபேசி – 119 – பரீட்சைகள் திணைக்கள உடனடி தொலைபேசி – 1911 – பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குபடுத்தல் மற்றும் பெறுபேறுகள் பிரிவு – 011 2784208/ 011 2784537 – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்
 – 011 2785211/ 011 2785212

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






புதன், 11 மே, 2022

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது கொள்கை விவாதங்களுக்கு தயாராகும் வகையில் இலங்கையுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை தொடரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்கள் தொடங்கும் வகையில் இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்தார்.
“மே 9-23 இல் எங்கள் மெய்நிகர் பணியில், தொழில்நுட்ப மட்டத்தில் விவாதங்கள் தொடங்கப்பட்டு, திட்டமிட்டபடி தொடர்கின்றன, இதனால் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு முழுமையாக தயாராக இருக்க வேண்டும்” என்று
 நோசாகி கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் 
அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவுவதற்கு நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்” என நோஸாக்கி மேலும் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





செவ்வாய், 8 மார்ச், 2022

இலங்கையில் காலையிலும் மாலையிலும் மாத்திரம் பேருந்து சேவைகள்

நாட்டில் காலையிலும் மாலையிலும் மாத்திரமே பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கருத்திற் கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி 07-03.2022.அன்று  மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் 
இடம்பெறாது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது இரவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 25 வீதமான தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன. நாளாந்த சேவைக்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் 
எதிர்கொண்டுள்ளன.
அத்துடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்தே எங்களால் எரிபொருளை பெறமுடிகின்றது எனவும் 
தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வந்த போதிலும் இது தொடர்பில் கசப்பான விடயங்களே இடம்பெறுகின்றன. எரிபொருள் நெருக்கடி காரணமாக நீண்டதூர பேருந்துசேவை சாத்தியமற்றதாக மாறியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

விடுதி நோயாளிகளிற்கு யாழ்.வைத்தியசாலையில் ஏற்பட பரிதாப நிலை

யாழ்.வைத்தியசாலை ஒன்றில் விடுதியில் தங்கியிருந்த நோயாளிகளிற்கு கடந்த 7ஆம் திகதி மருந்து வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து நோயாளி ஒருவர் வடக்கு ஆளுநருக்கு எழுத்துமூலம் முறைப்பாடளித்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த 7ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்கள் பல வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.
அன்று, யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையொன்றின் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளிற்கே மருந்து வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தாதிய தொழிற்சங்க தரப்பை
 தமிழ்பக்கம் 
தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட சம்பவத்திற்கும், தாதிர் பணிப்புறக்கணிப்பிற்கும் தொடர்பில்லையென மறுத்தனர்.
அன்று தாதியர்கள் பலர் பணிக்கு சென்றிருந்ததாகவும், வைத்தியசாலை நிர்வாக ரீதியான காரணமே இப்படியான சம்பவத்திற்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

புதன், 26 ஜனவரி, 2022

நீங்கள் வேலை தேடுபவரா வேலை கிடைக்க இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்

ஒருவருக்கு என்ன தான் வேலை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும், ஒவ்வொரு முறை நேர்காணலுக்கு செல்லும் பொழுது மனதில் நம்பிக்கையுடன் தான் செல்வார்கள். நமக்கு வேலை கிடைப்பதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. வேலைக்கு இந்த நாட்டில் 
எந்த பஞ்சமும் இல்லை.
ஆனால் மனதிற்கு பிடித்த வேலையும், நம்முடைய திறமைக்கு உரிய வேலையும் கிடைப்பது மட்டுமே சவாலான விஷயமாக இருந்து வருகிறது. பட்டப்படிப்பு படித்தவர்களை விட, சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? திறமைக்கு உரிய வேலை கிடைக்க சொல்ல வேண்டிய
மந்திரம் என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில்
தவிப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வணங்க நல்ல தீர்வு கிடைக்கும்.சுப்ரமணிய சுவாமி படத்தை வீட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுப்ரமணிய சுவாமி திருக்கோலத்தில் அமைந்திருக்கும் முருகன் படம் மிகவும் விசேஷமானது. இந்த கோலத்தில்

முருகரை வணங்குபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்,சாதனை புரிய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் வீட்டில் சுப்ரமணிய சுவாமி படத்தை கட்டாயம் வாங்கி வையுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் இந்த படத்தில் மலர் சாற்றி, கற்பூரம் 
ஏற்றி வழிபட வையுங்கள்.
அவர்களுடைய வெற்றிக்கு இந்த வழிபாடு சிறந்ததாக இருக்கும்.இந்த சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகத்தை அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பின்னர் சுப்ரமணிய சுவாமி படத்தின் முன்பு நின்று கொண்டே 108 முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த
இது போல் தினமும் செய்து வர நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும்.சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகம்:ராஜராஜஸகோத் பூதம்!ராஜீவாயத லோசனம்!ரதீசகோடி ஸௌந்தர்யம்!தேஹிமே விபுலாம் ச்ரியம்!!
நம்பிக்கையுடன் முருகப்பெருமானை வணங்கி தொடர்ந்து 48 நாட்களுக்கு இது போல் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை அமையும். நமக்கு எவ்வளவு தான் திறமைகள்
 இருந்தாலும் தெய்வத்தின்
அருள் இன்றி எதையுமே சாதிக்க இயலாது என்பதை மறந்து விடாதீர்கள். இந்த மந்திரத்தை உச்சரித்து முருகனின் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பின்னர் வெளியில் செல்லுங்கள். செல்லும் காரியம் 
நிச்சயம் வெற்றி பெறும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




Blogger இயக்குவது.