ஞாயிறு, 26 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

இலங்கையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை 
அன்றாட சேவைக்கு
அழைக்குமாறு அரச நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் ஒன்று.26-06-2022. இன்றைய திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி,
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு 
அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயன்ற வரையில் பணியாளர்களை வீட்டில் 
இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் குறித்த 
சுற்றுநிருபம் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.