வியாழன், 13 அக்டோபர், 2016

இறைச்சிக்காக பசுக்கள் ஏழாலைப் பகுதியில் களவாடப்பட்டுள்ளதாகபுகார்

யாழ் ஏழாலைப்பகுதியில் தொடர்ச்சியாக பசுக்கள் இறைச்சிக்காக களவாடப்படுவதாக பிரதேச கால்நடை வளர்ப்போர் கவலை வெளி யிட்டுள்ளனர். 
ஏழாலை கட்டுவன் டச்சு வீதியில் நேற்று இரவு வீட்டில் நின்ற பசு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். இதேபோல் தொடர்ச்சியாக பசுக்கள் களவாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்ற வாரம் கன்றுத்தாச்சி பசு ஒன்று களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
அத்துடன் அதன், வயிற்றிலிருந்த கன்றை எடுத்து வீசியுள்ளனர். இதனால் நாய்கள் அவ் இறந்த கன்றை வீதியில் இழுத்து சென்றதா கவும்
 தெரிவித்தார்.  
 இப்பகுதியில்     தொடர்ச்சியாக பசுக்கள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படுகின்ற செயற்பாடானது கால்நடை வளர்ப்போருக்கு அச்சத்தை ஏற்டுத்துவதாகவும் தெரிவித்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.