செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஆனையிறவு ரயில் நிலையம்! மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது

ஆனையிறவு ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து
 கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதியிலுள்ள மாணவர்கள் ரயில் மூலம், ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை செல்வோர். இதன்மூலம் ரயில் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படும்
நாட்டிலுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து இந்த ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கியுள்ளனர்.
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இரண்டு ரூபா வீதம் வழங்கினார்கள். ஆசிரியர்கள் பத்து ரூபா வீதம் நன்கொடை வழங்கினர்.
இதன்மூலம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டது. எஞ்சிய தொகையை கல்வியமைச்சு வழங்கியது.
குறித்த ரயில் நிலையத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை இரண்டு கோடி ரூபாவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.