யாழ் ஆழியவளை கடற்பரப்பில் 200 கிலோ கிராமிற்கு அதிகமாக கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள்
பருத்தித்துறைச் பகுதியை சேர்ந்து இரு மீனவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே
குறித்த சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.எனினும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பொலிஸார் தம்வசப்படுத்தியதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.