வெள்ளி, 21 அக்டோபர், 2016

கடல்கரையில் 50 அடி நீளமான திமிங்கிலம் அலை மோதும் மக்கள்!

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட கடற்கரையில் பாரியளவிலான உயிரிழந்த திமிங்கலங்கள் இரண்டு இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரன்தோம்ப கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் மற்றும் உயிரிழந்த திமிங்கலத்தின் குட்டி இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய திமிங்கலம் 60 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதுடன், குட்டி 12 அடி நீளமானதாகும். எனினும் இவை இறந்து சில வாரங்களில் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரைக்கு வருகை தந்த வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், இறந்த திமிங்கலத்தை பார்வையிட்டதுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.