செவ்வாய், 24 ஜூலை, 2018

மின்சாரம் தாக்கி கோப்பாய் பகுதியில் உயிரிழந்த பெண்

வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் நேற்று 21  சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தவராசா செபராணி என்பவரே உயிரிழந்தவராவர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 
தெரியவருவதாவது ,
வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைப்புக்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டருக்கு மின்சாரம் வழங்கப்பட்ட மின் வயர் சேதமடைந்திருந்த நிலையில், அந்த வயரை பிடித்தமையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என மரண விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.