துவிச் சக்கர வண்டியில் பயனித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கோப்பாய் இருபாலை கிழக்கை சேர்ந்த சபாபதி அருளானந்தம் என்ற 68 வயதுடைய வயோதிபர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வயோதிபர் கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது பேரப்பிள்ளையை ஏறுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு சென்று பேரப்பிள்ளையை ஏற்றிக்கொண்டு வீடு செல்லும் போது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படடர்.எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளார் என அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவரது
உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட்து.
இந்த இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக