வெள்ளி, 8 ஜூலை, 2016

வேல்சாமி 52தினங்கள் நடந்து கதிர்காமத்தில் கால் பதித்தார் !

எந்த தொல்லையும் இல்லை என்கிறார் அவர்!வெறும் நீர்த்தாங்கிகளும் இருந்தன!
கடந்த மே மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இலங்கையின் மிகநீண்ட கதிர்காமபாதயாத்திரைக்குழு நேற்று 52தின நடையின் பின்னர் கதிர்காமத்தில் கால் பதித்தது.
நேற்று அங்கு சென்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரை கதிர்காமம் தெய்வானை அம்மனாலய பொறுப்பாளர் அருள் வரவேற்று தேனீர் விருந்துபசாரம் வழங்கினார்.
வேல்சாமி அங்கிருந்து தகவல் தருகையில்:
கடந்த 52தினங்களாக நாட்டிலும் காட்டிலுமாக முருகனருளால் எவ்விதமான பிரச்சினைகளுமின்றி நடந்துவந்து சேர்ந்தோம்.என்னுடன் 123பேர் வந்தார்கள். உகந்தைமலை முருகனாலயத்திலிருந்து முதல்நாள் சுமார் 1000பேரளிவில் காட்டிற்குள் பிரவேசித்தோம்.
வழிநெடுகிலும் தண்ணீர்த்தாங்கிள் இருக்குமென வழியனுப்பிய மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் தீபா பத்மகுலசூரிய சொன்னார்.
சில இடங்களில் தண்ணீர்த்தாங்கிள் நீரில்லாமலிருந்தன. எனினும் நாம் கஸ்டப்படவில்லை..
குமுக்களன் ஆற்றில் நிறையதண்ணீர் சென்றது சிக்கலாகவிருந்தது. பெண்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கலாம்.
உபப்hற்றிலும் நீர் அதிகம்.
எனினும் பயணம் சுகமாகவிருந்தது. நாவலடியில் மருத்துவமுகாம் இடம்பெற்றது. சிங்கள் ஊடகவியலாளர்கள் என்னிடம் பேட்டி எடுத்தார்கள்.
இன்று கொடியேற்றத்துடன் நாம் வீடு செல்லவிருக்கின்றோம்
. என்றார்.
வேல்சாமி தலைமையிலான இக்குழுவினர் 7வது தடவையாக யாழ்ப்பாணத்திலிருந்து இவ்யாத்திரையை மேற்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
இம்முறை இவரது அணியில் 123அடியார்கள் பங்கேற்றனர்.அவர்களில் 50வீதமானோர் வடபகுதியைச்சேர்ந்தவர்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.