புதன், 6 ஜூலை, 2016

வரி நாய்களுக்கான அறவிடுதலை அறிமுகப்படுத்தியது யார்? வலுத்தது சர்ச்சை

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கான வரி அறவிடுதலை அறிமுகப்படுத்தியது முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவே என பிரதி ஊடகத்துறை அமைச்சர் கரு பரண விதாரன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு
 கூறினார்.
அரசாங்கம் நாய்களுக்கு கூட வரி விதிக்கின்றது என பஸில் ராஜபக்ஸ நேற்று ஊடகங்களிடம் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே பிரதி ஊடக அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், பஸில் ராஜபக்ஸ நாய்களின் கூண்டைப் பராமரிப்பதற்கு ஐந்து கடற்படையினரை முழுநேரப் பணியில் ஈடுபடுத்தியிருந்தார் எனவும், நாய்களுக்கான வரி அறவிடுதல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான முழுக் காரணமும் பஸில் ராஜபக்ஸவே என கரு பரணவிதாரன 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.