புதன், 3 ஆகஸ்ட், 2016

முச்சக்கரவண்டி 30 அடிபள்ளத்தில் பாய்ந்து விபத்து!

தலவாக்கலை நாவலப்பிட்டிய பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நாவலப்பிட்டிய கல்லோயா பகுதியில் இன்று நடந்துள்ளது.
இதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நகருக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டிய பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.