திங்கள், 29 ஆகஸ்ட், 2016

விபத்தில் கோப்பாய் பகுதியில் வைத்தியர் உயிரிழப்பு!


  யாழ்  கோப்பாய் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற இ.போ.ச.பஸ்ஸும் வைத்தியர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதாகவும் அந்த இடத்திலேயே வைத்தியர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் செந்வரன் (வயது 35) என்ற வைத்தியரே உயிரிழந்தவராவார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.