திங்கள், 30 ஜனவரி, 2017

தாய், தந்தை, குழந்தை கொலை சம்பவத்தில் சிக்கினார் மேலும் ஒருவர்

அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்று முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்திருந்ததோடு நேற்று மாலை ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் நபரே கைது செய்யப்பட்டுள்ளதோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நபம்பப்படும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மூன்று டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.