ஞாயிறு, 12 ஜூன், 2016

பொதுவாக வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?…

 ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க 
வேண்டும்.
* வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
* இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
* வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
* சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
* குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.
* வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.
* அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது.
* துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
* உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.bothuva
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
$

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.