வெள்ளி, 24 ஜூன், 2016

சட்டவிரோதமாக இறைச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஆமைகள் மீட்பு!

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியிலிருந்து இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் எடுத்த செல்லப்பட்ட 6 ஆமைகள் அக்கராயன் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த ஆமைகளை எடுத்து சென்ற நபர் ஒருவரும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட ஆமைகளை கிளிநொச்சி
 மாவட்ட நீதவான்
 நீதிமன்றின் ஊடாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இன்று(வெள்ளிக்கிழமை) கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அருகிவரும் உயிரினங்களான ஆமைகள், உடும்பு, மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.