செவ்வாய், 21 ஜூன், 2016

நவற்கிரி நிலாவரையில் ராஜா பிளாசா மாதிரிக்கிராமம்?

யாழ் ஈவினை மஸ்கன் சந்தி புத்தூர் மேற்கு  நவற்கிரியில் (நிலாவரைக் கேணிக்கு அருகாமை) தனி ஒரு பெரும் கொடையாளரால் அமைக்கப்பட்டுள்ளது ராஜா பிளாசா மாதிரிக்கிராமம். யாழ்ப்பாணத்தில் பல கோடிபதிகள் வாழ்ந்தாலும்
இவரைப்போன்ற சில வள்ளல்களின் உதவிகள் வாழ்வாதாரமற்ற ஏழைகளுக்கு பெரும் உபகாரமாக அமைகின்றதை மறுக்கமுடியாது. இக்காலத்தில் இப்படிப்பட்ட பேருதவிகளைச் செய்வோர் வெகு சிலரே.
எனவே இத்தகைய செயல்பாடுகளை நிச்சயம் நாம் வரவேற்றேயாகவேண்டும்.
மேலும் இக் கொடையாளரால் கோண்டாவில் கிராமத்திற்கு தபால் கந்தோருக்கான கட்டிடமும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 
இப்படி யாழ்மாவட்டதில் உள்ள எல்லாக் கிராமங்களும் அதே போல் தமிழர் பிரதேசங்களில் வாழ்கின்ற, வசிக்கும் இளைஞர்களும் தனவந்தர்களும் சிந்தித்து உதவிபுரிந்தால் நாம் எவரிடமும் கையேந்தவேண்டிய அவசியமேற்படாது..
இவரை இந்த இணையமும் நாமும் இணைந்து
 வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.